Tuesday, December 26, 2023

எண்ணூர் எரிவாயு கசிவு - அவசர செய்தி

 எண்ணூர் எரிவாயு கசிவு - அவசர செய்தி




சென்னையில் உள்ள எண்ணூர் கோரமண்டல கம்பெனில இருந்து அம்மோனியா கசிகிறது என்று ஒருவருக்கு தொலைபேசி மூலமாக தகவல் வருகின்றது. அவர் அதை மற்றவர்க்கு பகிர்கிறார். ஊரில் உள்ள அனைவருக்கு அந்த தகவல் பகிரப்படுகிறது. இப்படி அமோனியா கசிந்தால் மூச்சுத்திணறல், வாந்தி, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகுமாம். அந்த ஊருல உள்ள மக்கள் எல்லோரின் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். ஊரில் உள்ள ஆண்கள் ஊரில் உள்ள பெரிய தலைவரை சந்திக்க செல்கின்றனர். அந்த தலைவரின் பெயர் என்னவென்றால் " குமரவேல்". அந்த தலைவர் மிகவும் நல்லவர். அவர் அவருடைய காரில் ஊரில் உள்ள மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி சென்று தொலைவில் விட்டிருக்கிறார். அம்மோனியா மிகவும் அபாயகரமான ஒரு வேதி பொருள் ஆகும். அந்த ஊரில் உள்ள மக்களில் சிலர் இரவில் கசிவு ஏற்பட்டதால் இந்த நொடி வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். சுமார் 25 பேர் முதல் 30 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு வாந்தி, ஒரு சிலருக்கு கண் எரிச்சல். ஒரு சிலருக்கு மயக்கம் இருக்கின்றதாம். அந்த எண்ணூர் அமோனியா வேதி பொருள் கம்பெனி அதன் குழாய்களை கடல் வழியாக இறக்கியிருக்கின்றார்கள். அதனால் அந்த குழாய் பாதுகாப்பற்றதாய் உள்ளதாம். அந்த குழாய் சுற்றி கற்கள் கொட்டியிருக்கிறார்கள். இப்போது வந்த புயல் மிக பெரிய புயல். அந்த புயலினால் கடல் அலைகள் அந்த கற்களில் மோதி இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. இது இரண்டாம் முறை ஏற்படுகிற கசிவு. இதற்கு முன்பு ஏற்பட்ட கசிவு பெரிய தலைகளை வைத்து சுமுகமாக பேசி முடிக்கப்பட்டது. இந்த முறை இரண்டாம் முறை ஏற்பட்ட கசிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரிய குப்பம், சின்ன குப்பம் பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் பெயர் கோரமண்டல். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் தான். அவர்கள் சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு உள்ள இப்போது வரை கம்பெனியை சுற்றி போராட்டம் செய்து வருகின்றனர். பாதுகாப்பற்ற கம்பெனி இதனை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Monday, December 25, 2023

"O" என்ற எழுத்தை பயன்படுத்தி ஆந்தை எப்படி வரைவது

 "O" என்ற எழுத்தை பயன்படுத்தி ஆந்தை எப்படி வரைவது 




நான் வரைவதை முழுமையாக பாருங்கள் மிக மிக எளிதாக உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன். முதலில் O என்ற ஆங்கில எழுத்தை வரைந்துகொள்ளுங்கள். நாம் அந்த O எழுத்தின் இரு ஓரங்களிலும் காத்து வரைய வேண்டும். பின் அந்த O எழுத்திற்குள் மேல்புறமாக இரு கண்கள் வரைய வேண்டும். கண்ணிற்குள் பென்சில் வைத்து கீழாக வர்ணம் தீட்டுங்கள். முக்கால்வாசி அளவிற்கு பென்சில் கொண்டு தீட்டுங்கள். பின் நமக்கு தானாகவே மேலே வெள்ளை விழி கிடைத்துவிடும். பிறகு ஆந்தையின் வாய் வரைந்துகொள்ளுங்கள். அந்த வாய் சிறியதாக கிழ்நோக்கிய முக்கோண வடிவில் வரையுங்கள். பின் ஆந்தையின் இறக்கை வரைய போகின்றோம். அதற்கு இரு புறங்களிலும் வளைவாக கொடு போட்டு கொள்ளுங்கள். அந்த கோட்டினுள் சிறு சிறு வளைவாக போடுங்கள். இப்போது ஆந்தையின் இறக்கை நமக்கு கிடைத்துவிட்டது. அதன் பின் ஆந்தையின் கால் வரைய வேண்டும். கால் வரைவது எளிது தான். நான் வரைவதை பார்த்து கொண்டே வரையுங்கள். ஆந்தையின் கால் வரைந்த பின் அது மரக்கிளையில் அமர்ந்திருப்பது போன்று வரைய வேண்டும். மரக்கிளை வரைவது வளைவாக அதன் கால் கீழிருந்து மேலாக ஒரு கொடு வரையுங்கள். அந்த கிளையில் இப்போது இல்லை இருப்பது போன்று வரையலாம். அது நன்றாக இருக்கும். இப்போது உங்களுக்குள் அழகான ஆந்தை அது மரக்கிளையில் அமர்ந்திருப்பது போன்று வரைந்தாச்சு. எப்படி இருக்கிறது...

Saturday, December 16, 2023

ஒரு கோட்டை எப்படி வரைவது என்று பார்க்கலாம்.

 ஒரு கோட்டை எப்படி வரைவது என்று பார்க்கலாம். 





முதலில் செங்குத்தாக அடிமட்டத்தில் ஒரு கோடு வரையுங்கள். அந்த கோட்டின் பக்கவாட்டில் வலதுபுறம் கடைசி முனையில் இருந்து ஒரு கோடு அதன் பின் கொஞ்ச இடைவெளி விட்டு மற்றொரு கோடு வரைக. இதே போன்று அதன் இடது புறத்தில் கடைசி முனையில் இருந்து ஒரு கோடு அதன் பின் கொஞ்ச இடைவெளி விட்டு மற்றொரு கோடு வரைக. வரைந்த இரு கோடுகளையும் இரு புறங்களிலும் இணைக்கும் வண்ணம் மேலே ஒரு கோடு  வரைய வேண்டும். அந்த கோட்டின் முனையில் இருந்து  முக்கோண வடிவில் இரு புறங்களிலும் கோடு வரைய வேண்டும். இப்போது கோட்டையின் இரு புறங்களிலும் மதில் சுவர் போன்று நமக்கு கிடைத்துவிட்டது. கோட்டையின் நடுவில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு சிறு சிறு கோடுகளாக வரைக. அந்த சிறு சிறு கோடுகளை இணைக்கும் வண்ணம் மேல் புறமாக ஒரு கொடு நடுப்புறமாக ஒரு கொடு கீழ்நோக்கி ஒரு கொடு வரைக. அப்படியே எல்லா கோடுகளையும் வரைய வேண்டும். இதுவும் மதில் சுவர் போன்று உள்ளது. பின் அந்த மதில் சுவரின் வலது புறம், இடது புறம் கீழிருந்து மேலாக ஒரு கோடு வரைக. அதிலும் முக்கோண வடிவில் இரு முன்பு வரைந்தது போலவே வரைய வேண்டும். இப்போது கோட்டை நமக்கு கிடைத்து விட்டது. கோட்டையின் மேல் கோடி பறப்பது போன்று வரைந்தால் மட்டுமே முழு கோட்டை வடிவம் நமக்கு கிடைக்கும். எனவே கோட்டையின் நடு சுவரில் ஒரு கோடி வரைக, பின் வலது பக்கவாட்டிலும், இடது பக்கவாட்டிலும் ஒரு கோடி வரைக. அப்புறம் கோட்டைக்கு வாயிற் வரைய வேண்டும். நான் வரைவதை பாருங்களும் அதுவும் மிக மிக எளிது தான். இப்போது வாயிற் கதவு வரைந்த பின், கோட்டையின் மதில் சுவரில் ஜன்னல் இருப்பது போன்று வரைய வேண்டும். மூன்று பெரிய மதில் சுவரிலும் ஒரு ஜன்னல் வரைந்தால் போதுமானது. இப்போது முழு கோட்டை நாம் வரைந்தாச்சு. 


Saturday, December 9, 2023

கப் கேக் எப்படி வரையலாம்?

 இப்பொது கப் கேக் எப்படி வரையலாம் என்பதை பார்க்கலாம். 



முதலில் இடது பக்கவாட்டில் ஒரு கோடு வரையுங்கள். பின் அடிப்புறமாக ஒரு கோடு வரையுங்கள். அந்த அடிப்புறமாக வரைந்த கோட்டின் அடிமுனையில் இருந்து வலது பக்கவாட்டில் ஒரு கோடு வரையுங்கள். பின் இரு பக்கவாட்டில் கோட்டினை இணைக்கும் வண்ணம் ஒரு வளைவு வளைவாக சிறு கோடுகளை வரைய வேண்டும். என்னை பாருங்கள். என் விடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும். அந்த வளைவு மேல் சிறு கோடு, கீழ் சிறு கொடு அப்படி வளைவு வளைவு போன்று அந்த கோடுகளை வரைய வேண்டும். அந்த சிறு சிறு கோடுகள் இரு பக்கவாட்டு கோடுகளையும் இணைக்கும். இப்போது நமக்கு கப் வடிவம் கிடைத்து விட்டது. 

இப்போது அதில் கேக் இருப்பது போல் வரைய போகின்றோம். அதற்கு இடது பக்கவாட்டில் இருந்து ஒரு சிறு சிறு வளைவு மேல்நோக்கி போடுங்கள். பின் அதில் இருந்து ஒரு சிறுவளைவு அதை விட கொஞ்சம் பெரியதாக போடுங்கள். பின் ஒரு வளைவு மேல்நோக்கி வரைந்து அதை பெரியதாக இழுக்க வேண்டும். என் விடியோவை பாருங்கள் உங்களுக்கு எப்படி என்று புரியும். அப்புறம் நீங்கள் வரைந்த பெரிய வளைவில் இருந்து கீழ்நோக்கி வளைவு போட வேண்டும். முன்பு வரைந்த வளைவுகளை போன்றே கீழ்நோக்கி வரைய வேண்டும். அந்த வளைவு வலது பக்கவாட்டில் இணைத்து விடலாம். இப்போது கப் கேக் கிடைத்து விட்டது. 

இப்போது அந்த கேக் இன் கப் இல் சிறு சிறு கோடுகளாக செங்குத்தாக போட்ட கோட்டில் இருந்து கீழ்புறமாக கோடுகளை வரைய வேண்டும். அந்த கோடுகள் கப் இல் 6 வரைந்தால் போதுமானது. இப்போது ஒரு அழகான கேக் அப்புறம் கப் வரைந்துவிட்டோம். இப்போது கேக் கிற்கு கண் வரைய வேண்டும். இடது புற கண்ணை முதலில் வரையுங்கள். பின் வலது புறத்தில் ஒரு வட்ட வடிவம் போன்று கண் வரையுங்கள். இடது புறம் வரைந்த கண் திறந்திருப்பது போலும், வலது புற கண் மூடி இருப்பது போலும் வரைந்தால் அழகாக இருக்கும். இப்போது அதற்கு ஒரு வாய் ஒன்றும் வரையலாம். வாயிற்கு முதலில் ஒரு சிறு செங்குத்து கொடு அந்த கோட்டை இணைக்கும் வண்ணம் சிறு வளைவு அவ்வளவு தான் வாய் நமக்கு கிடைத்துவிட்டது. இப்பொது அழகான ஒரு கப்பில் கேக் இருப்பது போன்றும், அந்த கேக் கிற்கு கண் வாய் இருப்பது போன்றும் வரைந்துவிட்டோம்.

 எப்படி இருக்கிறது இந்த வீடியோ. உங்களுக்கும் வரைவதற்கு சுலபமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் எழுதி இருப்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் என் விடியோவை பாருங்கள். புரியும்...

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...