இப்போது ஒரு அழகான நாய் குட்டி எப்படி வரைவது என்று பார்க்கலாம். என்னை பின்தொடருங்கள். மிகவும் சுலபம் தான்.
முதலில் சிறியதாக ஒரு வட்டம் வரைந்துகொள்ளுங்கள். பின் அதன் அருகிலே மற்றொரு வட்டம் வரையலாம். இப்போது இரு கண்கள் போன்று நமக்கு கிடைத்துவிட்டது அல்லவா? இப்போது கண்ணின் உள்ளே நடுப்பகுதியில் ஒரு வளைவு போடுங்கள். அது கண்ணின் வெள்ளை நிறம். பின் அதற்கு மேலே நடுவிலே கருவிழி வரைந்துகொள்ளுங்கள். இப்போது கண்கள் நமக்கு கிடைத்துவிட்டது. அடுத்து கண்ணிற்கு மேலே புருவம் வரைய வேண்டும். முதலில் இடது புருவம், பின் வலது புருவம். இரு புருவங்கள் வரைந்தாச்சா? ஹ்ம்ம்.
இப்போது மூக்கினை எப்படி வரையலாம் என்று பாருங்கள். முதலில் ஒரு கொடு செங்குத்தாக போடுங்கள் பின் இரு புறங்களிலும் ஒரு வளைவு, நடுவில் ஒரு சிறிதாய் வளைவு, இப்போது மூக்கு கிடைத்துவிட்டது. இப்போது அடுத்து வாய் வரைய வேண்டும். வாயினுள் நாக்கு இருப்பது போன்றும் இரு பற்கள் தெரிவது போன்றும் வரைந்துகொள்ளலாமா? ஹ்ம்ம். இப்போது முகத்தை சுற்றி வரைந்து ஒரு முழு நாயின் தலை இருப்பது போன்று என்னை பின் தொடர்ந்து வரைந்துகொள்ளுங்கள். பின் இரு காதுகளையும் வரையலாம். முதலில் வலதுபக்க காது பின் இடதுபக்க காது. இரு காதுகளையும் வரைந்த பின், அதன் சிறிய கழுத்து அது நின்று கொண்டிருப்பது போன்று உடல் அமைப்பின் இரு தோள்களை வரைந்துகொள்ளுங்கள்.
பின் நாய் குட்டியின் அழகிய இரு கைகளை வரைந்துகொள்ளலாம், கைகளில் வலது கை, அடுத்து இடது கை. இரு கைகளும் ஒரு சுவரின் விளிம்பை பிடித்து எட்டி பார்ப்பது போல் வரைந்துகொள்ளலாம். பின் நாய் குட்டியின் கண்களில் உள்ளே பென்சில் வைத்து தீட்டிக்கொள்ளுங்கள். அடுத்து நாய்க்கடியின் மூக்கின் இரு புறங்களில் அருகிலும் குட்டி குட்டியாக புள்ளி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து நாய்க்கடியின் வாயில் நாக்கை தீட்டிக்கொள்ளுங்கள். இப்போது அழகிய நாய் குட்டி வரைந்தாச்சு. எப்படி இருக்கிறது சொல்லுங்கள்.
No comments:
Post a Comment