Sunday, March 5, 2023

கோபத்தை தூக்கியெறிந்துவிட்டு உன்னை சந்தோசமாக வாழ பழக்கப்படுத்திக்கொள்

 எல்லோருக்கும் வணக்கம்,


கோபம் நம்மை கொடூரமாக மாற்றும். கோபத்தை விட்டால் கொடிநன்மை கிடைக்கும். நமக்கு கோபம் வராமல் நாம் அமைதியான ஒரு ஆளாக, நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம். அனால் ஒரு சிலரோ நம்மை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். அப்படி வேடிக்கை பார்ப்பவர்கள் இவ்வுலகில் நிறைய உண்டு. உங்கள் வாழ்க்கையில் கூட கோபம் தாண்டவம் ஆடியிருக்கும். நீங்கள் கோபத்தில் தடால், புடால் என்று குதித்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்களை பற்றி தெரியும். அவர்கள் உங்களை புரிந்து வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் உங்கள் கோபத்தை புரிந்ததனால் உங்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு வந்திருக்கும். ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி யோசித்திருக்கிறீர்களா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நீங்கள் எத்தனை முறை கோபப்பட்டாலும் உங்களை சகித்துக்கொள்ளும் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் அவர்களை கொஞ்சம் மனதில் நிறுத்தி யோசித்து பாருங்கள். 

     அப்பா, அம்மா உங்களுக்கு நல்லது தான் செய்ய நினைப்பார்கள். நீங்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால் சோம்பேறித்தனம் அதிகமாகி விடும். உங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்றால், பின்னால் உங்கள் அப்பா, அம்மா உங்களுக்கு திருமணம் முடித்துவைத்தால் அவர்களை  வைத்து வாழ்வதற்கு பணம் தேவை. அந்த பணத்தை சம்பாதிக்க உங்களை வேலைக்கு செல் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் நீங்கள் அதை தவறுதலாக புரிந்துகொண்ட அவர்கள் மீது கோபம் கொள்வீர்கள். அவர்கள் என்ன செய்வார்கள் எத்தனை காலம் தான் உங்களை வைத்து அவர்கள் சோறு போடமுடியும் இதை யோசிக்காமல் அவர்கள் மீது நீங்கள் கோபப்பட்டு, நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் எங்காவது போய் தொலைகிறேன் என்று கோபப்படுவீர்கள். நியாயப்படி கோபம் என்பது அவர்களுக்கு தான், உங்கள் மீது வர வேண்டும். ஆனால்  மாறுதலாக நீங்கள் அவர்கள் மீது கோபப்படுவீர்கள். 

     நீங்கள் உங்கள் சொந்தக்காலில், அதாவது உங்களை உங்களால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற அளவிற்காவது நீங்கள் உழைக்கவேண்டுமல்லவா? அந்த உழைப்பே உங்களை மற்றவர்களுக்காகவும் உழைக்க வைக்கும். உழைப்பு உயர்வு தரும் கேள்விபட்டுருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தால் அது உங்களுக்கு பணத்தை மட்டுமில்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரும். 

     கோபத்தை நீங்கள் வீட்டில் காட்டுவது போல் அலுவலகத்தில் காட்ட கூடாது. சக ஊழியர்கள், உங்களோடு பணிபுரிபவர்கள் உங்கள் கோபத்தை சகித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களை விட அதிகம் கோபம் கொள்பவர்களாக கூட இருக்கலாம். அவர்களை நீங்கள் அனுசரித்தது தான் செல்ல வேண்டும். வேலை என்று வந்துவிட்டால் அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முழு கவனமும் அதில் இருந்தால், உங்கள் வேலை தானாக முடியும். உங்கள் அலுவகத்தில் நீங்கள் கோபப்பட்டால் உங்கள் வேலை இழக்க கூட நேரிடலாம். உங்கள் மேலாளர், உங்கள் சக ஊழியர், உங்களிடம் கோபப்பட்டால் கூட அவர்களை அனுசரித்து செல்ல உங்களை பழக்கி கொள்ளுங்கள். திறமையாக யோசித்தால், உங்களுடன் கோபம் கொள்பவர்களை உங்களுக்கு, உங்களால் நண்பனாக்க கூட முடியும். கோபத்தில் பல எதிரிகளை சம்பாதிக்கலாம். அனால் நீங்கள் அந்த கோபத்தை கட்டுப்படுத்தி பல நண்பர்களை சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள். பலரிடம் உங்களுக்கு கோபத்தின் மூலம் கூட அனுபவங்கள் கிடைக்கலாம். 

     வீட்டில் எப்பொழுது  நீங்கள் வருவீர்கள் என்று உங்கள் வயதான அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் உங்களுக்காக காத்திருப்பார்கள் என்று நியாபகத்தில் வைத்துக்கொண்டு, அலுவலகத்தை விட்டு கிளம்பும் பொழுது அவர்களை மனதில் வைத்துக்கொண்டு பூண்முகத்துடன் செல்லுங்கள். அலுவகலகத்தில் என்ன கோபம், சண்டை பிரச்சனை இருந்தாலும் அதை வீட்டின் வாசற்படியில் கழற்றிவைத்துவிட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். உங்கள் அம்மா, அப்பாவை வீட்டிற்கு வந்தவுடன் உணவு சாப்பீட்டீர்களா என்று கேளுங்கள் சந்தோச படுவார்கள். 

     உங்கள் மனைவியிடம் நீங்கள் அன்பாக நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு சாப்பாடு பரிமாறும் போது நீ சாப்பிட்டாயா என்று கேளுங்கள். உங்களுடன் சேர்ந்து  அவர்களையும் உணவு சாப்பிட சொல்லுங்கள். என்ன கோபம் என்றாலும் அதை கொஞ்சம் ஓரம் வைத்து விட்டு உங்க குழந்தைகளை கொஞ்சுங்கள். அவர்களோடு விளையாடுங்கள்., உங்கள் கோபம் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடி விடும். முடிந்தால் உங்கள் மனைவி போல் நீங்களும் ஒரு அம்மாவாக குழந்தைகளுக்கு உணவு வாயில் ஊட்டி விடுங்கள். உங்கள் குழந்தை சிறுவயது அதாவது 5 வயதிற்குள் உள்ளது என்றால் அவர்களுக்கு உணவு, விளையாடிக்கொண்டே ஊட்டி விடுங்கள். அவர்கள் சந்தோசப்படுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் மனதில் உள்ள கோபம் மறைந்து மனம் முழுவதும் ஆனந்தத்தில் பொங்கும். இதை முயற்சி செய்து பாருங்கள். 

     எப்பொழுதும் மனைவி எது செய்தாலும் இது நல்லாயில்ல, அது நல்லாயில்ல சொல்வதை விடுங்கள். எதற்கெடுத்தாலும் கோவப்படாதீர்கள் மனையிடம். மனைவி நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்று தானே பார்த்து பார்த்து உணவை செய்கின்றார்கள். ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றை நினைத்து உதாரணமாக பண பிரச்சனை வைத்திக்கொள்வோம், இது தான் பொதுவான பிரச்சனை எல்லோருக்கும். 

இதை மனதில் வைத்து அதை எண்ணி எண்ணி மனதை சலனப்படுத்தி கொண்டு உங்கள் மனைவி மீது கோவம் கொள்வீர்கள். அவர்கள் ஏதோ ஒரு உணவு செய்து நீங்கள் சாப்பிட கொடுத்தால் சாம்பார் சரியில்லை, சட்னி சரியில்லை, என்ன தோசை இப்படி இருக்குறது, என்ன சோறு வேகவே இல்லை. இப்படி அப்படி என்று அவர்கள் மீது உங்கள் கோபத்தை காட்டி எரிந்து விழுவீர்கள். அப்படி கோபத்தை காட்டாதீர்கள்.  

     அவர்கள் மீது அதற்கு மாறாக அன்பை காட்டுங்கள். உங்கள் மனைவியிடம் நீ வைத்த சாம்பார் ரொம்ப நல்லாருக்கு, சட்னி ஆகா ஓகோ என்று சொல்லுங்கள் அவர்கள் மகிழ்ச்சியில் வெட்கப்படுவார்கள். உங்களையும் சந்தோசமாக வைத்திருப்பார்கள். சந்தோஷம் நம் வாழ்க்கையில் கடைசி வரை இருக்கவேண்டும் என்றால் கோபத்தை தூரமாக தூக்கி எறிந்துவிட்டு அன்பை பொழியுங்கள். சந்தோசமாக இருங்கள். எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்கு தான் நடக்கின்றது என்று கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு சந்தோசமாக இருங்கள். 



கோபம் என்ற முகமூடியை கழட்டிவிட்டு சந்தோசமாக வாழுங்கள்.... வாழ்க்கை வாழ்வதற்கே. வாழும் வரை சமாதானமாக, சந்தோசமாக வாழுங்கள்.. 


Thursday, March 2, 2023

எங்களுக்கென்று வந்த சொந்தம் - ஜிம்மி (1)

 எல்லோருக்கும் வணக்கம்,

எங்க வாழ்க்கையில எங்களுக்கு கிடைச்ச சொர்க்கம் அப்படினா அது எங்க ஜிம்மி தான். யாரு அந்த ஜிம்மி. ஜிம்மி என்றால் என்ன? ஒருசிலர் யூகிச்சுரப்பிங்க. ஜிம்மி அப்படினா நாய்னு. ஜிம்மி எங்க வீட்டுல உள்ள செல்ல பிள்ளை. ஆமா. அன்பு, அறிவு, பொறுமை, இரக்கம், எல்லாமே எங்க ஜிம்மி கிட்ட ரொம்ப அதிகம். அந்த ஜிம்மி பத்திதான் நான் இந்த வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன். எனக்கு நாய் வளர்க்குறதுனா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே எனக்கு நாய் வளர்க்க ரொம்ப ஆசை. எங்க வீடு வாடகை வீடு. அதனால் என்னால் வளர்க்க முடியவில்லை. 

நான் படித்துமுடித்து ஒரு நல்லவேலைக்கு சென்ற பிறகு, என் பெற்றோரின் அனுமதியுடன் காதல் திருமணம் செய்துகொண்டேன். . என் மனைவி வீட்டில் அவள் பூனை வளர்க்கிறாள். அவளுக்கு பூனை என்றால் ரொம்ப பிடிக்கும். அவள் வைத்திருக்கும் பூனையின் பெயர் வட்டம். அது வெள்ளை நிற பூனை. அதில் கருப்பு நிறத்தில் வட்டம் இருக்குமாம். அதனால் வட்டம் என்று பெயர் வைத்துவிட்டால். வித்தியாசமாக உள்ளதல்லவா? ஆம். 

எனக்கு திருமணம் முடிந்தது. நான் சென்னையில் பணிபுரிய வேண்டிய  சூழ்நிலை எனக்கு வந்தது. வாரம் ஒருமுறை இரு நாட்கள் சனி மற்றும் நியாயிற்று கிழமை வந்து என் மனைவியை பார்த்துவிட்டு செல்வேன். என் மனைவியின் வீடு சொந்த வீடு. எனக்கு நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசையை என் மனைவியிடம் கூறினேன். அவளோ  இல்லை வேண்டாம். பூனை இருக்கின்றது என்று கூறினால். எப்படியாவது சம்மதிக்கவைக்க நினைத்தேன். அதற்காக திட்டமெல்லாம் போட்டேன். என்ன இது நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசைக்காக திட்டமா? உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அனால் இது தான் உண்மை. என் மனைவியையும் அவள் அம்மாவையும் சம்மதிக்க வைக்க நாய்கள் ஜாக்கிரதை படத்தை போட்டு காண்பித்தேன். அவர்கள் அதை பார்த்தவுடன் கொஞ்சம் மனம் இறங்கினார்கள். 

நாய் வளர்க்க சம்மதித்தார்கள். என் அத்தைக்கு முழு விருப்பம். அனால் என் மனைவி பூனை மீது கொண்ட பாசத்தால் கொஞ்சம் யோசித்தால். பிறகு என் ஆசை  நிறைவேற வேண்டுமென அவள் சம்மதித்தாள். என்ன நாய் வாங்க வேண்டும் என்று நினைக்கிறாய் என்று என்னிடம் கேட்டாள். நான் சிறு வயதில் இருந்தே லாப்ரடார் ரெட்ரீவர் வாங்க வேண்டும் என்று ஆசை. அது எப்படி வந்தது என்றால் என் வீட்டின் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு வீட்டில் இந்த வகை நாய் தான் வளர்த்தார்கள். அது பார்ப்பதற்கு மிக அழகானது. யாரையும் கடிக்காது. குழந்தை போன்றது. சொன்ன சொல் கேட்பது. எதையும் எளிதில் புரிந்துகொள்ள கூடிய அறிவு அதற்கு உண்டு என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். 

நான் என் மனைவிக்கு ஜேர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் போட்டோ அனுப்பினேன்.



 இதில் எது பிடித்திருக்கிறது என்று சொல் என்றேன். அதற்கு அவள் நீ என்ன வளர்க்கவேண்டும் என்று நினைக்கிறாய் என்று கேட்டாள். அவளிடம் நான் "லாப்ரடார்" வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று கூறினேன். அதற்கு அவளும் சரி, உன் விருப்பம் என்று சொல்லிவிட்டாள். எனக்கு ரொம்ப சந்தோஷம். அவளுக்கு அதில் கொஞ்சம் விருப்பம் இல்லை இருப்பினும், என் ஆசைக்காக சரி என்று சொல்லிவிட்டாள். என் சந்தோஷம் தான் அவள் சந்தோஷம் எப்பொழுதும்.

என் மனைவியின் ஊர் ஒரு பேரூராட்சி. எனவே அங்கு நாய் குட்டி விற்பனை  செய்பவர்கள் என்று யாரும் இல்லை. நான் ஜிம்மி வாங்க வேண்டும் என்று இணையதளத்தில் தேடினேன்.  நான் என் மனைவி  ஊரில் இருந்து ஒரு 50 கிலோமீட்டர் தொலைவில் மாநகராட்சி ஒன்று உள்ளது. அங்கு சென்று தான் ஜிம்மி வாங்கினேன்.  அப்போது ஜிம்மி விலை 7,000. ஜிம்மி எங்கள் வீட்டிற்கு 14-01-2014 அன்று வந்தது.  நான் அந்த மாநகராட்சியில் இருந்து எங்கள் ஊரிற்கு ஒரு கூடையில் ஆட்டோவில் எடுத்து வந்தேன். 

எங்கள் வீட்டிற்கு ஜிம்மி வந்தவுடன் என் மனைவிக்கு அது பிடித்திருந்தது. அனால் அதன் மேல் அவளுக்கு ஈர்ப்பு இல்லை. நான் கொண்டு வந்து விட்டுவிட்டு 3 நாட்களில் ஊருக்கு சென்று விட்டேன். அது இரவு முழுவதும் குறைத்தது. இரவில் பயந்து அலுமாம். என் மனைவி ஜிம்மி வந்ததனால் பூனை பயந்து வீட்டிற்கு வர பயப்படுகிறது. பூனை வந்து உணவு சாப்பிட்டு  விட்டு உடனே சென்றுவிடுகிறது, வீட்டில் இருப்பதே இல்லை. அப்படியே  இருந்தாலும் இந்த ஜிம்மி அதனை துரத்தி விடுகிறது என்று கூறினாள். ஏன் இந்த ஜிம்மி வாங்கினாய் என்று என்னிடம் தொலைபேசியில் பேசும்போது கேட்டாள். நான் அவளை எப்படி சமானதானப்படுத்த என்று யோசித்தேன். அதற்கும் ஒரு யோசனை உடனே எனக்கு வந்தது.

நான் என்  மனைவியிடம் அது பாவும் டா. அதற்கென்று யாரும் இல்லை. நான் வேற அதன் அம்மாவிடம் இருந்து பிரித்து கூட்டிவந்து விட்டேன். நாம் தான் இனி அதனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினேன். உடனே என் மனைவியின் மனம் கொஞ்சம் இளகியது. அவள் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து பார்த்தாள். அவளுக்கும் கொஞ்சம் அதன் மேல் பாசம் வர ஆரம்பித்தது. நான் கூறியதை நன்றாக யோசித்து விட்டு எங்கள் ஜிம்மி  மீது பாசம் காட்ட ஆரம்பித்தாள். ஜிம்மி எங்கள் வீட்டில் குழந்தை போல் ஆனது. 


உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...